Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, October 04, 2009

செவிட்டுப் பீத்தோவன்




உள்ளம் நிறைந்த காதல்
கிடக்கிறது என்னுள்ளே..
பெண்ணே
சொன்னால்
நம்பமாட்டாய் நீ
என்றும் காதலிக்கப்படாத
என்னுள்
உள்ளம் நிறைந்த காதல் கிடக்கிறது.


நடு இரவில் தூரத்தில் கேட்கும்
பென்சு+ரியின் கனமான நாதமாக
அதிகாலையில் கேட்கும்
இளையராஜாவின் குரலாக
ஏதோ புனிதமாக மனதைக்கனமாக்கும்
தூய்மையுடன்
என்னுள் அது கிடக்கிறது.


அழகிய பெண்ணுக்கு
ஆம்பிளைப்பெயர் மாதிரி
எனக்குப்பொருத்தமில்லாமல்
கடல்போல ஆனால்
ஆர்g;பரிக்காத அமைதியான
காதல்
கொட்டிக் கிடக்கிறது என்னுள்ளே.

சிங்காரப்பெண்களின்
இடைவளைத்து
வலிக்கப்புணர்ந்தபின்
அவள் தலைமயிர்கோதும்
அந்தச்சின்ன நிமிடங்களில்
எந்த வேசியும் அதைக்கண்டுவிடுறாள்.
அவளுக்குள்ளும் ஏதோ ஒரு விகிதத்தில்
அப்படிக்காதல் கிடக்கலாம்.
நள்ளிரவில்
களைத்துக்கிடக்கும்
அவள் சுவாசச்சத்jj;தை இமைகொட்டாமல்
உற்றுக்கேட்டவாறு எனது
ஏமாற்றங்களை சீரணித்துக்கொள்கிறேன்.


இசையின் ஏற்ற இறக்கங்களில்
மறைந்துகிடக்கும்
மனதை அலைக்கழிக்கும் வலிமையுடைய
காதல்
எனக்குள் ஒழுகிக்கொண்டே இருக்கிறது.
Ng];fpw;uhwpd; me;j kaf;Fk; mjpu;it vdf;Fs;
gug;gpf;nfhz;Nl
ஒருவருக்கும் கொடுக்கப்படாமல்
அது பெருகிக்கோண்டே இருக்கிறது.
எனக்குத்தெரிகிறது
அது என்னை விளுங்கிவிடும்.

அது
என்னை எதையோ தேடவைக்கிறது.
செய்வினைசெய்ததுமாதிரி
கூலாகூப்ஆடும் ஒல்லிச்சிறுமியின்
மேலேசொருகிக்கொள்ளும்
சாம்பல் விழிகள் போல்
துடித்தவாறு என்னைத்தேடவைக்கிறது.
உச்சமடையும்
கிழட்டுப் பெண்பூனையின் கதறல்போல
மூலைமுடுக்கெல்லாம் பட்டு
முழங்கும் எதிரொலியாய்
ஓயாமல் என்னை அலைக்கழிக்கிறது.


இது ஒரு உணர்வு.
எந்தப்பெண்ணுக்கும்
அதைநான்கொடுக்கமுடியும்.
உண்மைதான் உனக்கு மட்டும்சொல்கிறேன்.
ஆவளின் நன்றிப்பார்வையிலும்
rpன்ன இதழ்முத்தத்திலும்
பல லட்சமாக
பெருகியல்லவா விடுகிறது அது.

என்னசெய்வேன் நான்
உள்ளம் நிறையப்பொங்கும்
காதலை வைத்துக்கொண்டு.
வெற்றுச்சொற்கள் கவிதையாகும்
பனிப்பூக்கள் உதிரும் ஒற்றையடிப்பாதையின்
இளங்காற்று வீசும் அதிகாலைத்தருணங்களில் இருக்கும் காதலை
உனக்கு விளங்கவைப்பதில்
நான் தோற்றுப்போனேன்.


இது பெருகிக்கொண்டே இருக்கிறது
என்னுள்ளே.
என்னை சீரஞ்சீவியாக்குவதற்கு
செவிட்டுப்பீத்தோவன் போல.

Wednesday, September 23, 2009

அப்பா கொண்டுவந்த ஆப்பிள்..





சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.

இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.

எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.

கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.

அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….

அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.

தன்
சி;ன்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.

தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.

தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி
உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.

தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில்
வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.

மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.

ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..

ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.

-சேரன்கிருஷ்

Friday, September 11, 2009

வெள்ளைவேட்டிக் கள்ளர்கள்

அந்தா..

vட்டிக்காட்டிய

மெல்லிய விரல் நுனிகளில்

தெரிந்தது

என் பிளக் அனட்; வைட்காலம்

தண்டவாளத்தின் கனமான

ஓசையற்ற இருப்பைப்போல

நீண்டு கிடந்தது

ஒற்றைப்பின்னல்

வண்ணாத்திப்பூச்சிக் கிளிப்புடன்.


பின்னுக்கு கைபோய்

பிறசியர் பூட்டும்போது

திமிறி நின்றன மார்புக்குலைகள்.

மூக்குத்தி

இடம்மாறிஇருந்தது கண்ணாடியில்.

செல்போனின் முனையில்

தொங்கியபடி சின்னதாய் கரடிக்குட்டி

அதன்

இன்னும் சின்ன ரீசேட்டில் சிவப்பாய்

என் முதல்எழுத்து.


எத்தனை முறைதின்பேன்

இந்தச்சொண்டை>

ஐந்தே நிமிடங்களில்

மீண்டும் புதுமையுடன்...

கண்திறந்தால் தெரியும்

சிலநேரம் கண்ணீருடன் படபடக்கும்

இரு சின்னக் கண்கள்>

வலியோ என்ன சவமோ..


வீட்டில் சொல்ல வில்லையா..

ஆங்கிலத்தில் கேட்டால் என்ன

mர்த்தம் மாறாதே?

சிலநேரம் தோன்றும்...

கட்டினால் போகிறது..

சிங்களமோ தமிNoh..

கம்பாயமும் ஒருமாதிரி காவ்சாறிதான்.



எட்டிக்கிடந்த லப்டொப்பில்

சிலநேரம் பேஸ்புக்.

பாஸ்வேட்டும் என்பெயரா..

புத்தா என்பதா முருகா என்பதா


கலைந்த கட்டில் நேரானது.

மீண்டும் வரும் அந்தப்

பத்து நிமிடப்பசி

‘வீட்டில் சொல்லவில்லையா'

என்னும் போது மட்டும்

எனக்குg; பராசக்தி..

ஊமாயாகும் சக்திவேண்டும்.


-Nrud;fpU\;

Loops solutions - Social media marketing in Sri lanka