Saturday, September 30, 2006

ஜென்மங்கள் தோறும் தோடரும்...


அந்திவானம் மஞ்சள் வயிற்றுடன்!
இறந்துகொண்டிருக்கும் சூரியனுடன்
நிறமிழக்கும் பச்சைப்புல்வெளி
முடிவருடும் குளிர்காற்றுஉடல்குளிர்ந்து இமைமூடவைக்கும்
தொலைவில்
வெள்ளையாய் மௌனமாய்
முகில் சூழ்ந்த மலைவிளிம்புகள்-எல்லை கட்டி
பண்டைய எச்சங்களின் இரகசியங்களை
பாறையிடுக்குகளில் புதைத்துக்கொண்டு
அடக்கமாய் அமைதியாய்

சேரநாட்டு அரண்னைகளில்;
அந்திநேரக் கேளிக்கைகளின் ஆரம்பநேரம்
இன்றும்
காதோரம் உரசிச்செல்லும்
துந்துபி நாதங்களில்முற்பிறப்பு ஞாபகங்களின்
கறுப்புவெள்ளை அசைவுகள்.
அடிமனதில் அமிழ்ந்து கிடக்கும்
மெல்லிய கவலைகளின்சிலிர்ப்பு

வானம் தெலைந்துகொண்டிருக்கிறது
நீலமாய் அருகிலிருந்து
கறுப்பாய் விரிந்து..
மன்மினிப்பொத்தல்களுடன்நிறமிழந்து.
நாற்புறம் சூளும்கருப்பின் படையெடுப்பு
இருளின்கண்கள்திறக்கின்றது.
எல்லாத்திக்கிலும்கறுப்புத்தெளிக்கும் இருள்.
கறுப்பே இருளாய்
இருளே எல்லாமுமாய்


சேரநாட்டு அரண்மனைச்சுவர்கள்
இருளின் பகைகள்
நிலவின் ஒளியுறிஞ்சும்
தண்ணொளி இருள்விரட்டும்
மையிருட்டில்
தெலைவெளிகளைக் கடந்து
ஒளிரும் அரண்மனை- இருள்வெல்லும்
இரவிலும் நடக்கும் சேரன் ஆட்சி

விணையொலியின் அதிர்வில்
இலைவிரிக்கும் புல்
நந்தவனப்பாதைகளில்
அரண்களின்இடுக்குளில்.
சலங்கையொலிகளில்பலம் பெற்ற- சேரநாட்டு
அந்தப்புரத் தூண்களுடன்தேவதைகளின் இருப்பு
பனிநீர் நிரம்பும் வாவிகளில்
உடல் களுவும் ஆடையற்ற தேவதைகளின்
சிரிப்பின் சிந்து
துள்ளிவிளும் மீன்களின்
நீர்ச்சலசலப்புடன்காற்றில் கரையும்
தடாகங்களின் தங்கப்படிகளின்கரையோரம் மிதக்கும்
சிலநூறு பூக்களின்தேன்கலந்த குளத்து நீர்
சேரன் காவலில் பயம்மறந்து
நிச்சலனமாய்குறும்புசெய்யும்
வெண்துகில்தேவதைகளின்
இருப்பால் உயிர்கொண்ட உலகம்


ஒலம் நிறைந்த இடத்தில்
விலகிநிற்கும் புல்வெளி
நிசப்த்தமாய் காற்றை மட்டும்வரவேற்கும் விந்தை
மலையுச்சிகளில் மட்டும் மிஞ்சிநிற்கும்
ஒளியின் மிச்சங்கள்.
மலையின் கீழ்
பீடபுமியில்
காட்டில் புகும் மந்தைகளின் நிழலுருவங்கள்
ஏதோ ஒன்று உயிர்பெறப்போவதானஉணர்வு
நெற்றியில் வெடிக்கிறது.
காலின் கிழ் விரிந்துகிடக்கும்உலகத்தின் எல்லைகள்
உச்சியில் நான்மட்டும்
முற்பிறப்புநினைவிலும் புற்களின் நடுவிலும்
தொண்டை கிழிக்கும் ஒலியால்
மலைகளை தகர்க்கவேண்டும் போலமதர்ப்பு
காலின் கீழ்த்தூசியாககிடக்கும்உலகத்தை
இமைகளை இடுக்கிப்பார்கிறேன்.
என்றோ ஒருநாள்
சேரநாட்டுமக்களின்வாழ்விடமாக இருந்ததை.
சேரமன்னனின்
ரதங்கள் சென்ற பாதையின்தடங்கள்-இங்குதான்
எங்கோ அருகேஇருந்தது.
ஆக அதிககாலமில்லை
கீழ்க்காட்டில் குத்திட்டுவிழும்
கழுகின் சத்தம்!
பட்டமரங்களுக்கூடேஅதிர்ந்து செல்கிறது.
புதியசேரமன்னன் வரவுடன்

-சேரன் கிருஷ்
Loops solutions - Social media marketing in Sri lanka