Monday, October 19, 2009

சேர்ப்பவன்



இளநீலம் பச்சை

இருள்கறுப்பு

கடல்நுரையின் வெண்மை


வண்ணங்கள் என்னை இழுக்கின்றன.

அவன் முணுமுணுத்தான்.


இவ்வண்ணக்கலப்புடன்

இணைந்து அதிரும் மென் டிஜிட்டல்

இசையில்

உலகின் உச்சசோகத்தை

உருவாக்க முடியும் என்று சொன்னான்


அடிவானத்தில் சேருவதாய்த்தெரியும்

தண்டவாளக்கோடுகளைநோக்கி

நம்பிக்கையுடன் நடக்கும்

குழந்தையின் ஏமாற்றத்தையும்

ஆர் ரகுமானின் காதல் தோல்வியையும்

தூரத்தில் தனிமையில் இசைக்கும்

சாகிர்உசைனின் ஒற்றைத் தபேலாவையும்

சேர்த்துக்கொள்

யோசனை சொன்னேன்.

நன்றியுடன் ஏற்றுக்கொண்டான்.

கைக்காய்ப்புக்களைத்தடவிப்பார்க்கும்

முதிர்ந்த உழைப்பாளியின்

இயலாமை..

முதிர்கன்னியின் பெருமூச்சுடன் கலந்த

இளவயதுக் காதல் நினைவுகள்

மகனின் சின்னவயதுக்குறும்புகளை

அவனுக்கே சொல்லும்

ஞாபகம்தொலைத்த முதிய தாய்..

விடியும் நேரம் மங்கத்தொடங்கும்

குருட்டுத்தெருவிளக்கு..


இன்னும் வேண்டும் சோகம் என்றான்.


அப்பிடியானால் சரி

ஊரடங்கிய யாழ்ப்பாணத்தின் பின்னிரவுகளில்

வைமன்வீதியால் ஊர்ந்துபோகும் -ஒற்றை

மோட்டார்வண்டியின் சத்தத்தையும்

சேர்த்துக்கொள்

நான் விலகிநடந்தேன்.



-சேரன்கிருஷ்

Sunday, October 04, 2009

செவிட்டுப் பீத்தோவன்




உள்ளம் நிறைந்த காதல்
கிடக்கிறது என்னுள்ளே..
பெண்ணே
சொன்னால்
நம்பமாட்டாய் நீ
என்றும் காதலிக்கப்படாத
என்னுள்
உள்ளம் நிறைந்த காதல் கிடக்கிறது.


நடு இரவில் தூரத்தில் கேட்கும்
பென்சு+ரியின் கனமான நாதமாக
அதிகாலையில் கேட்கும்
இளையராஜாவின் குரலாக
ஏதோ புனிதமாக மனதைக்கனமாக்கும்
தூய்மையுடன்
என்னுள் அது கிடக்கிறது.


அழகிய பெண்ணுக்கு
ஆம்பிளைப்பெயர் மாதிரி
எனக்குப்பொருத்தமில்லாமல்
கடல்போல ஆனால்
ஆர்g;பரிக்காத அமைதியான
காதல்
கொட்டிக் கிடக்கிறது என்னுள்ளே.

சிங்காரப்பெண்களின்
இடைவளைத்து
வலிக்கப்புணர்ந்தபின்
அவள் தலைமயிர்கோதும்
அந்தச்சின்ன நிமிடங்களில்
எந்த வேசியும் அதைக்கண்டுவிடுறாள்.
அவளுக்குள்ளும் ஏதோ ஒரு விகிதத்தில்
அப்படிக்காதல் கிடக்கலாம்.
நள்ளிரவில்
களைத்துக்கிடக்கும்
அவள் சுவாசச்சத்jj;தை இமைகொட்டாமல்
உற்றுக்கேட்டவாறு எனது
ஏமாற்றங்களை சீரணித்துக்கொள்கிறேன்.


இசையின் ஏற்ற இறக்கங்களில்
மறைந்துகிடக்கும்
மனதை அலைக்கழிக்கும் வலிமையுடைய
காதல்
எனக்குள் ஒழுகிக்கொண்டே இருக்கிறது.
Ng];fpw;uhwpd; me;j kaf;Fk; mjpu;it vdf;Fs;
gug;gpf;nfhz;Nl
ஒருவருக்கும் கொடுக்கப்படாமல்
அது பெருகிக்கோண்டே இருக்கிறது.
எனக்குத்தெரிகிறது
அது என்னை விளுங்கிவிடும்.

அது
என்னை எதையோ தேடவைக்கிறது.
செய்வினைசெய்ததுமாதிரி
கூலாகூப்ஆடும் ஒல்லிச்சிறுமியின்
மேலேசொருகிக்கொள்ளும்
சாம்பல் விழிகள் போல்
துடித்தவாறு என்னைத்தேடவைக்கிறது.
உச்சமடையும்
கிழட்டுப் பெண்பூனையின் கதறல்போல
மூலைமுடுக்கெல்லாம் பட்டு
முழங்கும் எதிரொலியாய்
ஓயாமல் என்னை அலைக்கழிக்கிறது.


இது ஒரு உணர்வு.
எந்தப்பெண்ணுக்கும்
அதைநான்கொடுக்கமுடியும்.
உண்மைதான் உனக்கு மட்டும்சொல்கிறேன்.
ஆவளின் நன்றிப்பார்வையிலும்
rpன்ன இதழ்முத்தத்திலும்
பல லட்சமாக
பெருகியல்லவா விடுகிறது அது.

என்னசெய்வேன் நான்
உள்ளம் நிறையப்பொங்கும்
காதலை வைத்துக்கொண்டு.
வெற்றுச்சொற்கள் கவிதையாகும்
பனிப்பூக்கள் உதிரும் ஒற்றையடிப்பாதையின்
இளங்காற்று வீசும் அதிகாலைத்தருணங்களில் இருக்கும் காதலை
உனக்கு விளங்கவைப்பதில்
நான் தோற்றுப்போனேன்.


இது பெருகிக்கொண்டே இருக்கிறது
என்னுள்ளே.
என்னை சீரஞ்சீவியாக்குவதற்கு
செவிட்டுப்பீத்தோவன் போல.

Wednesday, September 23, 2009

அப்பா கொண்டுவந்த ஆப்பிள்..





சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.

இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.

எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.

கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.

அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….

அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.

தன்
சி;ன்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.

தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.

தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி
உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.

தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில்
வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.

மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.

ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..

ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.

-சேரன்கிருஷ்

Friday, September 11, 2009

வெள்ளைவேட்டிக் கள்ளர்கள்

அந்தா..

vட்டிக்காட்டிய

மெல்லிய விரல் நுனிகளில்

தெரிந்தது

என் பிளக் அனட்; வைட்காலம்

தண்டவாளத்தின் கனமான

ஓசையற்ற இருப்பைப்போல

நீண்டு கிடந்தது

ஒற்றைப்பின்னல்

வண்ணாத்திப்பூச்சிக் கிளிப்புடன்.


பின்னுக்கு கைபோய்

பிறசியர் பூட்டும்போது

திமிறி நின்றன மார்புக்குலைகள்.

மூக்குத்தி

இடம்மாறிஇருந்தது கண்ணாடியில்.

செல்போனின் முனையில்

தொங்கியபடி சின்னதாய் கரடிக்குட்டி

அதன்

இன்னும் சின்ன ரீசேட்டில் சிவப்பாய்

என் முதல்எழுத்து.


எத்தனை முறைதின்பேன்

இந்தச்சொண்டை>

ஐந்தே நிமிடங்களில்

மீண்டும் புதுமையுடன்...

கண்திறந்தால் தெரியும்

சிலநேரம் கண்ணீருடன் படபடக்கும்

இரு சின்னக் கண்கள்>

வலியோ என்ன சவமோ..


வீட்டில் சொல்ல வில்லையா..

ஆங்கிலத்தில் கேட்டால் என்ன

mர்த்தம் மாறாதே?

சிலநேரம் தோன்றும்...

கட்டினால் போகிறது..

சிங்களமோ தமிNoh..

கம்பாயமும் ஒருமாதிரி காவ்சாறிதான்.



எட்டிக்கிடந்த லப்டொப்பில்

சிலநேரம் பேஸ்புக்.

பாஸ்வேட்டும் என்பெயரா..

புத்தா என்பதா முருகா என்பதா


கலைந்த கட்டில் நேரானது.

மீண்டும் வரும் அந்தப்

பத்து நிமிடப்பசி

‘வீட்டில் சொல்லவில்லையா'

என்னும் போது மட்டும்

எனக்குg; பராசக்தி..

ஊமாயாகும் சக்திவேண்டும்.


-Nrud;fpU\;

Monday, September 07, 2009

“கலாங்” கும் காயத்ரி மந்திரமும்





“கலாங்” கும் காயத்ரி மந்திரமும் உலகத்தில் இருப்பது ஒரே ஒரு இந்தியாதான் ஆனால் லிட்டில் இந்தியாக்கள் பல இருக்கின்றன.சிங்கப்பூரில் ஒரு லிட்டில் இந்தயா மலேசியாவில் ஒரு லிட்டில் இந்தியா தாய்லாந்தில் ஒரு லிட்டில் இந்தியா.இந்தியர்களுடனும் நகைக்கடைகளுடனும் தெருவில் வெற்றிலைத்துப்பல்களுடனும் மற்றும் பல சிறப்பம்சங்களும் இவற்றுடன் இருக்கும்.சிங்கப்பூரின் அந்த இரண்டு ராட்சதக்கட்டடங்களுக்கு நடுவே இருந்த குட்டித்திடலில் சீமெந்து பெஞ்சில் இருந்தவாறு ஸ_க்…ஸ_க் என்னும் கார்களைப்பாரத்துக்கொண்டிருந்தபோது மணி இரவு ஒண்டு இருபது.ரோட்டைக்கடந்து எதிரே இருக்கும் சாப்பாட்டுக்கடையில் இந்நேரமும் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.சாய்ந்து உட்காரந்து தெருவைப்பார்த்து சோம்பிப்போனேன்.ஒன்றின்பின் ஒன்றாய் தொடராய் வந்தது கொட்டாவி. சீமெந்து பெஞ்சில் இருந்து இறங்கி சிக்னலில் நிற்கும் வாகனங்களை அவசரமாகப்பார்த்துக்கொண்டு தெருவைக்கடந்து போய் கரும்புச்சாறுபானம் ஒரு டின் வாங்கிக்கொண்டேன். ஒரு சிங்கப்பூர் டொலர்.எழுபத்தைந்து ருபாய்.


இங்கேயே டின்னை உடைப்பதா என்று சின்ன மனப்போராட்டம். கடையின் ஒரு மூலையில் பிளாஸ்ரிக்கதிரையில் ஆடாமல் இமைவெட்டுவது தெரியாமல் வெள்ளைப்பேய்போல அமர்ந்திருந்தான் ஒரு தாய்லாந்துக்காரன்.சிகரெட்டுக்கைமட்டும் உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது.புகைத்தல் தவம் செய்துகொண்டிருந்தான்.தெற்கே தொடங்கும் தெருவில் உயரமான வெள்ளைக்காறி கொறவொறவென சூட்கேசை இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.கருப்புக்குட்டைப்பாவாடை அவளது நடைக்கேற்ப துள்ளித்துள்ளி விலக என்னைப்பார் என்றன மெல்லிய வழுவழுத்த கால்கள்.கரும்புப்பானத்தைச்சுமந்துகொண்டு எனது திடலுக்குத்திரும்பினேன்.


இரண்டு ஆணாய்ப்பிறந்து பெண்ணாய் மாறிய வேசிகள் செயற்கை முலைகள் இரண்டும் முள்ளாய்க்குத்த சோம்பல் முறித்தார்கள்.எனது அருமையான சீமேந்துபெஞ்சு பறிபோய்விட்டிருந்தது.அழகாக சுருக்கமில்லாமல் விரித்திருந்த புல்தரையில் பதிபோட்டுக்கொண்டேன்.எனது நண்பன் வரும் வழியைத்தான்;காணவில்லை.


அடோய்.. நேரத்தை வீணாக்கிப்போட்டாய்..
இருந்த இருப்பில் கழுத்தைமட்டும் திருப்பினேன் அவன்தான்.

இப்பத்தான் வாறியோ..நாயே..

டேய் இதில குந்திக்கொண்டு இருந்த நேரத்துக்கு பின்னுக்குத்திரும்பிக் கேட்டுப்பாத்திருக்கலாமே..சும்மா தானே இருக்குறாளுகள்.

ஏன்னெண்டு அவ்வளவு உறுதியா ‘அவள்’ தான் என்டு சொல்லுறாய் மச்சான்.குரல் எஸ் பி.பிக்கு தொண்ட அடைச்சதுபொலயெல்லொ இருக்கு.தயிரெடுக்க கையைவிட்டு மத்து வந்துதெண்டா?அது சரி இப்ப எங்க போறம்?

நண்பன் அடக்கமுடியாமல் பெரிதாகச்சிரித்தான்.வேசிகள் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு தங்கள் கதையைத்தொடர்ந்தார்கள்.

புண்.... நாளைக்கு புதவருசத்தை வைத்துக்கொண்டு இண்டைக்கு எங்க போறம் எண்டு கேக்கிறாய். இங்க கொழும்பு கிளப்பெண்டே ஒண்டு இருக்கு.கிழடுகள் தான் நிண்டு ஆடிக்கொண்டிருக்குங்கள்.எண்டாலும் பரவாயில்லை.போவம் வா.. அங்க போனாப்பிறகு யோசிப்பம் பிறகு எங்க போறதெண்டு.

எனது நெட்டை நண்பன் போய்க்கொண்டிருந்தான்.அந்த நடுச்சாமத்திலும் முஸ்தப்பாவின் முன்பக்கத்தில் றோட்டைக்கடந்துகொண்டிருந்த இரண்டு கைலாசபிள்ளையாரடி பொடியங்கள் கையாட்டினார்கள்.”என்ன இந்தநேரம்” என்ற குரல்களை வாகனங்கள் நசுக்கிக்கொண்டு சென்றன.

குறுக்கு வீதியைக்கடந்து பழசுபட்டுக்கிடந்த ஒரு தொழிற்சாலையின் பின்புறமாக நாங்கள் விரைந்து நடந்தோம்.எனது இடதுகைப்பக்கத்தில் மி;ன்னிக்கொண்டிருந்தது சிங்கப்பூரின் என்றும் உறங்காத துறைமுகம்.சுறுசுறுப்பான சிங்கப்பூர்.பெரிய மைதானத்தில் சிறிதாக இருந்தது அந்த கொழும்பு கிளப்.மைதானத்தில் அங்காங்கே கடதாசிகள் காற்றில் பறந்தன.பகல்நடந்த களியாட்டத்தின் தடங்கள்.

என்ன சாப்பிடுறாய்….

ஏதாவது கொத்துறொட்டி கிடைக்குமா? ஒரு குளிர்ந்த பீருடன்.

சப்தமில்லாமல் கொத்துறொட்டியை சாப்பிடத்தொடங்கினேன். இசைக்குளு மேலைத்தேய இசையைப்பொழிந்து தள்ளிக்கொண்டிருந்தது.குடும்பமாக வந்திருந்த ஒரு தாய் தன் மகளுக்கு மேலைத்தேய நடனத்தை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.மங்கிய வெளிச்சத்தில் கண்ணைக்கூர்ந்து பாரத்தால் சாம்பல்நிறமாக நெடுந்தூரம் பரவிக்கிடந்தது மைதானம்.அப்பால் வானுயர்ந்த கட்டடங்கள் விளக்குகளால் செய்யப்பட்டிருந்தன.இசைபொழிந்து கொண்டிருந்தது.என் நெட்டை நண்பன் பூல் விளையாடிக்கொண்டிருந்தான்.

ஏதிரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவருக்கு மன்னிக்கும் புன்னகைசெய்து விட்டு மெதுவாக எழுந்தேன்.விளையாடிக்கொண்டிருந்த நெட்டை நண்பனைப் பார்த்தேன்.புரிந்துகொண்ட நெட்டை நண்பன் கையைஆட்டியவாறு பூல் மேசையில்இருந்து விலகி என்னை நோக்கி வந்தான்.களுவும் அறையில் ஐந்து நிமிடங்களைக்கொன்றபின் பின்கதவால் வெளியேறினோம். சிங்கப்பூரின் கொழும்புக்கிளப்பின் பின்புறமாகப்போன பாதையில் போய் பிரதான தெருவை அடைந்தோம்.


இந்தா. இது என்ன?
புண்.. பாரன் எழுத்தை.


வயாக்ரா..இளநீல டயமண்ட் வடிவமாத்திரை.

சும்மாயிரு.எனக்கு வேண்டாம்.
நாயே.. போட்டுத்தான் பாரன். சுpறிலங்காகாரன் என்டா இவளுகளுக்கு இளப்பமடா.நீயும் போய்ப்பருசுகெடுத்துப்போடாதை.

இதப்போட்டாத்தான்டா பருசுகேடு.இவளுகளுட்டை பரிசுகெட்டாப்பரவாயில்லை.நாளைக்கு கலியாணம் கட்டினாப்பிறகு வாறவளிட்ட பரிசுகெடாம இருக்கோணும்.


சிங்கப்பூரில் ஒரு சீமேந்துக் குச்சொழுங்கையில் ஒரு தாத்தா தனது ஸ்டைலான சின்ன மோட்டர்சைக்கிளுடன் காலையில் இருந்து மாலைவரை காவல்இருப்பார்.மோட்டார் சைக்கிளின் பின்பக்க பெட்டியில் வயாக்கிரா மற்றும் இன்னபிற துணைச்சாதனங்கள் நிரம்பியிருக்கும்.ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க மலாய்த்தாத்தா இதை ஒரு சேவையாகச்செய்து வந்தார் போல.முகத்தில் எந்தச்சலனமும் இருக்காமல் வாழைப்பழம் விற்பதுபோல வயாக்ரா விற்பார்.கொச்சை ஆங்கிலத்தில் சில சமயம் கொக்கோக விமர்சனமும் செய்வதாக எனது நெட்டை நண்பன் சொன்னான்.


கொண்டா உன்ர பேரச்சொல்லிப்போடுறன்.சில ஆக்களுக்கு கண்தெரியாமயெல்லாம் போயிருக்காமே உண்மையா? சில ஆக்களுக்கு விறப்பு எடுபடாதாமே?

நாயே.. நீயும் போடாம.. என்னையும் பயப்பிடுத்திக்கொண்டு…கொண்டா அத.

சரி சரி விடு.

சியர்ஸ் சொல்லி தண்ணியில்லாமல் விழுங்கினோம்.ஏதொ பயம்வந்து அடிவயிற்றில் பாரமாய் உட்கார்ந்துகொண்டது.மணி அப்போது இரவு 2:05

மச்சான் எனக்கு யானைபலம் வந்ததுமாதிரி இருக்கு.உனக்கு எப்பிடி?

நண்பனின் மனநிலையை அறிவதற்காக சும்மா உசுப்பினேன்.

உன்னை இஞ்சனேக்க அடிச்சுத் தாட்டுப்போட்டுப் போடுவன்.உனக்குத்தான் இது புதிசு. எனக்கில்ல. நண்பன் சிரித்தான்.


வளுக்கிக்கொண்டு வந்தது சாம்பல் நிற பென்ஸ். தலையில் மஞ்சள் எழுத்துக்களுடன். எனது நெட்டை நண்பன் ஆசுவாசமாக பின்சீட்டில் தன்னை புதைத்துக்கொண்டு ‘கலாங்’ என்றான்.

சாதுவா வேர்க்குது மச்சான்…

அட நாயே.. பயப்பிடாத.ஒண்டும் செய்யாது.ஆகப்பயமாயிருந்தா காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டுவா.


நண்பன் காயத்திரிமந்திரம் சொல்லிக்காட்டத்தொடங்கினான்.கொத்துரொட்டியுடன்;விட்ட கால்ஸ்பேக் காயத்திரி மந்திரமாக கொட்டத்தொடங்கியது.


ஓம் பூர்;புவஸ்வக.. தத்சவிதுர் வரேண்யம்.. கடவுளே.. உலகத்தின் தந்தையே’ வாழ்க்கையின் பொருளே’ வலிகளில் இருந்து எம்மை விடுவிப்பவனே…. -

-சேரன்கிருஷ்

Saturday, August 15, 2009

வெள்ளவத்தை கடற்கரையும் அவசரப்பட்ட காதலர்களும்

மேல்பொத்தான்திறந்த மேல்சட்டையின் ஒரு கையில்புகுந்து மறுகையல் வந்தது காற்று.காலிவீதியிலேயே கடற்கரையின் உப்புக்காத்து மணம் கசிந்துகொண்டிருந்தது. வெள்ளவத்தை காலி கலர்லைட்டில் நண்பர் பிரசாத்திற்காக பார்த்துக்கொண்டிருந்தேன். புளுக்கடித்ததுபோல திடீரென ஒரு கடற்கரைப்பயணத்திற்கு ஆசைவந்தது.நீச்சலுக்குபுறப்பட்டுக்கொண்டிருந்த நண்பர் பிரசாத்தை மறித்து கடற்கரைபோக ஆயத்தமானோம்.


புpரசாத் தன்னுடைய கமராவையும் தன்னுடன் கொண்டுவந்தார்.நெடுகிலும் பயன்படுத்தும் ஸ்ரேசன் வீதியைத்தவிர்த்து மனிங்பிளேஸ_க்கு முன்னால் உள்ள வீதியால் கடற்கரையைநோக்கி நடைபோட்டோம்.ஐந்தரை மணிவெய்யில் கணகணப்பாக இருந்தது.உச்சவெம்மையிலிருந்து தணிந்து கொண்டிருக்கும் தருணம் உலகம் இளமாலைப்பொழுதில் மினிங்கிக்கொண்டிருந்தது.கடற்கரையெங்கும் தண்டவாளத்திற்கு இந்தப்பக்கமாக நெடுகிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் வந்த சுற்றுலாப்பயணிகளில் கடைசித்தரிப்பைப்போல இருந்தது. ஆங்கேயும் இங்கேயும் பட்டங்கள் பறக்க கலகலப்பாக இருந்தது கடற்கரை.

rரி இந்த அருமையான மாலைப்பொழுதை நண்பர் பிரவீன் இழக்கக்கூடாது என்ற நல்லெண்zj;தில் அவரையும் தெலைபேசியில் அழைத்தால் பிரவீன் பின்னேரம் உண்ட மயக்கமும் உறங்கிய மயக்கமும் தெளியாத நிலையில் தொலைபேசியில் தூங்கிவிழுந்தார்.சரி இவர்வந்தால் கடற்கரையில் குப்பறப்படுத்தாலும் படுத்துவிடுவார் என்று பயந்து தெலைபேசியைத்துண்டித்துவிட்டு நடையைத்தொடர்ந்தோம். வேள்ளவத்தை கடற்கரை புதுமையானது.அதில் நீங்கள் ஓடிவிளையாட முடியாது.ஆனால் ஒளிந்து விளையாடலாம்.(படத்தை பாருங்கள் புரியும்.(பதிவர் மருதமூரான் இங்குதான் வீட்டுப்பாடம் செய்வதாகச்சொல்கிறார்கள்). அதையும் விட அடித்துப்பிடித்து விளையாடலாம்.தண்டவாளத்தில் கும்பலாக கும்மியடிப்பவர்கள் ரெயின் வந்ததும் இந்த விளையாட்டை விளையாடுவார்கள்.

அப்படியே நடந்துபோனால் நண்டுக்கும் கடல்அலைக்கும் நடக்கும் யுத்தத்தை பார்கலாம்.என்ன நீங்கள் கால்சட்டையை சுருட்டிவிட்டு வளுக்கும் பாறைகளில் பல்லை பந்தயம் வைத்து இறங்கவேண்டும். இடைக்கிடை நீங்கள் வித்தியாசமான ஆமைகளைப்பார்க்கலாம்.இந்த ஆமைகள் குடைகளுக்குள் குந்தியிருக்கும்.டெனிமும் பஞ்சாபிக்கால்களும் சிலவேளைகளில் வெளியே தெரியலாம்.பாறைகளில் பாiறைகளாய் ஒட்டியிருக்கும் இந்த ஆமைகள் சிலநேரம் வினோதமான சத்தங்களை எழுப்பும்.’ம்ம்ம்… ஸ்ஸ்..’. நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது.அப்படி நீங்கள் அடக்கமுடியாத ஆமைரசிகரா,அப்படியானல் ஆமைகளை ரசிப்பதற்கு சில தந்திரங்கள் இருக்கின்றன. சன்ரீவி பார்ப்பதுமாதிரி அதைப்பார்க்கக்கூடாது.ஆமைகள் இன்னமும் தங்களை உள்ளே இழுத்துவிடும்.குடைஓட்டுக்குள் தங்களை ஒளித்துக்கொள்ளும்.சக்திரீவி பார்ப்பதுமாதிரி பார்த்தால் உங்கள் கண்ணுக்கு ஏதாவது சிக்கலாம்.அப்படியும் முடியவில்லையா.கவலையைவிடுங்கள் கடற்கரையெல்லாம் இந்த ஆமைகள்தான்.போறவழியெல்லாம் பார்த்துக்கொண்டே போகலாம்.

கடல்அரிப்பைத்தடுப்பதற்கு போடப்பட்டிருகும் பாறைகள் பிரமாண்டமாக வழியெல்லாம் கருமையாக விளிம்புகட்டியிருக்கும்.அலைஅடிக்கும் போது நீல அலை வெள்ளைப்பாலாக இந்த பாறைகளுக்கிடையே வழிகிறது.கடற்கரைமுடியும் இடத்தில் ஏதோ ஒரு ஜப்பானிய தன்னார்வத்தொண்டுநிறுவனம் அருமையாக சீமெந்து பெஞ்சுகளையும் சிறுவர் விளையாடும் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.இலக்கியச்சந்திப்புகளுக்கு அருமையான இடம் இது.கையில் கால்ஸ்பேக்குடன் கடற்கரையில் கவிதைபேசும் காலம்பற்றி நாங்கள் நீண்டநேரம் உரையாடினோம்.கடற்கரையில் இருந்து ஒரு நூறுமீற்றர்களுக்கப்பால் நிரைத்துச்செல்லும் கப்பல்கள் மினுங்கியபடி எங்களுக்கு துணைநின்றன.






இருளிலும் ஒளிரும் பட்டம்

தண்டவாளத்தில் வளர்ந்த வெள்ளைப்பூக்கள்

கடற்கரையை அண்மித்துள்ள தொடர்மாடிகளில் ஒன்று




வீ வோன்ற் றிவென்ஜ்ஜூ

றயிலுக்கு டாட்டா..




அவசரப்பட்ட காதலர்கள்
அவசரப்பட்ட காதலர்கள்






காதலர்கள் ?? சந்திக்கும் தாளைமரத்து குகைமறைவு
பதிவர் சந்திப்புக்கு லொக்கேஷன் பார்க்கப்படுகிறது


ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடிநிற்கும் கொக்கு


அலையுடன் சண்டையிடும் நண்டு




பாறையுடன் மோதி பாலாய் வழியும் அலைகள்












Loops solutions - Social media marketing in Sri lanka