Tuesday, May 19, 2009

நீசெய்த எல்லாத்தீமையும் மறந்து கண்ணீர் துளிர்கிறது மலையாய் இருந்த நீ வீழ்ந்திருப்பதைப்பார்த்து

இன்றய்தமிழர்களின் நிலையை அச்சொட்டாகச்சொல்கிறது இரயாகரனின் இந்த அலசல்.


அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தின் மேலான இனவெறுப்பையும், அலட்சியத்தையும் அருவருக்கத்தக்க முறையில் பேரினவாதம் விதைக்கின்றது.

தமிழினமோ செய்வதறியாது கூனிக் குறுகி நிற்கின்றது. பயப்பீதியில் உறைந்து, நிலை தடுமாறுகின்றது. தனிமனிதரிடையே பழிவாங்கும் உணர்வு வன்மமாகி, கொப்பளிக்கின்றது.

மறுபக்கத்தில் தமிழினம் துயரமடைந்து நிற்கின்றது. துன்பம் தாங்காது அழுகின்றது. இந்த மரணங்கள் எதுவும் நடக்கவில்லை என்று நம்ப முனைகின்றது. மண்ணிலிருந்து புலம்பெயர் தமிழ் சமூகம் வரை, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குள் தவிக்கின்றது. இது ஒரு இனத்தின் ஓலமாக எழுகின்றது.

தனிப்பட்ட ரீதியில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எனெனின் அது இனம் மீதான இனவழிப்பின் ஊடாகவே அரங்கேறியுள்ளது. தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் உணர்வு கொண்டவர்கள்; தான், இந்த மரணத்தில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியாக அரசுடன் நிற்கின்றவர்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் குதூகலிக்கின்றனர்.

ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்?

தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில், தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது. அதற்காக அது பாசிச மாபியா என்ற அரசியல் வழியை தேர்ந்தெடுத்தது. இதை அது தமிழ் மக்கள் மேல் திணிக்க, தமிழ்மக்கள் மேலான பேரினவாத இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தான் உறுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. இதற்காகத்தான், பாசிச மாபியா என்ற அரசியலை செய்வதாக கூறிக்கொண்டது.

இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும், மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.

இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று, தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.

இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர். தமிழ் மக்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைக் கண்டனர். இதற்குள்தான் தமிழ் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்குமுறையும் காணப்பட்டது.

ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லா மனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.

புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.

இப்படி தமிழ்மக்கள் மரணித்துப் போன இந்த புலித் தலைவர்களின் கீழ் வாழ்ந்தார்கள். இதனால் அவர்களின் மரணத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இனவழிப்பு நடத்தி, தம் தலைவர்களை கொன்றதை அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.

தம் இனத்தின் மேலான ஒரு இனவழிப்பு யுத்தத்தில், அவர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் புலிகளுடன் நின்றனர். அவர்கள் அரசுடன் சேர்ந்து நிற்கவில்லை. புலிகள் தமிழ் மக்களுடன் நிற்கா விட்டாலும், அவர்களுக்கு எதிராக செயற்பட்ட போதும், எதிரிக்கு எதிராக புலியுடன் நிற்கவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த அரசியல் எதார்த்தத்தை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். மக்கள் நம்பிய அந்த தேசியத்துக்காக, துரோகம் செய்யாது புலித் தலைவர்கள் போராடி மடிந்துள்ளனர். இந்த மக்கள் அதற்குத்தான் தலைசாய்க்கின்றனர்.

நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்?

புலிகளின் தவறுகள் தான் தோல்வியாகியுள்ளது. புலிகளின் அரசியல் தான், இன்று தமிழ் மக்களை நடுரோட்டில் அரசியல் அனாதையாக்கியுள்ளது. மொத்தத்தில் தங்கள் தவறுகளை அவர்கள் கடுகளவு கூட சுயவிமர்சனம் செய்யவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கூட கோரவில்லை. இந்த நிலையில் நாம் அவர்களின் தவறுகளை அங்கீகரிக்க முடியாது. பொறுப்புள்ள வகையில் அதை சுட்டிக்காட்டி விழிப்புற வைப்பதன் மூலம் தான், மக்களின் எதிரியை வீழ்த்த முடியும். மீண்டும் அதே தவறுகளுடன் தமிழினம் பயணிக்க முடியாது.

இந்த தியாகமும், இந்த அவலமும் தவறான ஒரு அரசியல் வழிகாட்டலின் கீழ் நிகழ்ந்துள்ளது. எதிரி நண்பன் என்ற மக்கள் அரசியல் அடிப்படை இன்றி நிகழ்ந்துள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் எதிராகவே, இது தன்னை நிலைநாட்டிக் கொண்டது. அனைத்துவிதமான மக்கள் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கூட இது மறுதலித்தது. தேசிய பொருளாதாரத்தை சிதைத்தது. பல ஆயிரம் அப்பாவிகளின் உயிர்களை காவு கொண்டது. தேசியத்துக்காக, மக்களின் உரிமைக்காக நின்றவர்களை கொன்று குவித்தது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் எதையெல்லாம் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்துதான் அது தற்கொலை செய்து அழிந்தது.

இந்த விடையத்தை இன்று புரிந்துகொள்ள முடியாத எல்லையில் தமிழ் சமூகம், இந்த மரணத்துக்கு தலை சாய்க்கின்றது. நாங்கள் இதற்காக அல்ல. மாறாக எதிரியிடம் சரணடைந்து ஒரு துரோகத்தை செய்ய மறுத்து, தம் இலட்சியத்துக்காக இறுதிவரை போராடி மடிந்ததற்காக, புலியில் இருந்து ஒரு துரோகத்தை புலியின் பெயரால் இனி செய்ய முடியாத வண்ணம் தம் மரணம் மூலம் பதிலளித்த அந்த நேர்மைக்காக, நாங்கள் தலைவணங்குகின்றோம்.

இறந்தவர்கள் எம் எதிரி வர்க்கம் என்ற போதும், பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற அந்த தனித்தன்மை என்றும் மதிப்புக்குரியது. எல்லா வர்க்கத்தையும் தன் பின்னால் பலாத்காரமாக திரட்டிவைத்துக்கொண்டே, இந்த அரசியல் தற்கொலையை செய்துள்ளது. புலிகள் போராட்டத்தில் சரி, பிழை என்று கற்றுகொள்ள நிறைய விடையங்கள் உண்டு. புலிகளை எதிர்மறையில் உள்வாங்கி, அதை சமூகத்தின் முன் உடைத்துப் போடுவது அவசியமாகின்றது.

மக்களின் எதிரி, புலியை முன்னிறுத்தி தன்னை தூய்மைப்படுத்த முனைகின்றது. எல்லாம் புலிகளால் என்று சொல்ல முனைகின்றது. எல்லாம் பிரபாகரன் என்று காட்ட முனைகின்றது. எல்லா அரசியல் வேஷதாரிகளும்; இதற்குள் தான் புழுக்கின்றனர். நாம் இதைத் தெளிவாக மறுக்கின்றோம்;. இந்த இடத்தில் புலிகளின் தவறுகளை ஈவிரக்கமின்றி சரியாக இனம் காட்டி, எதிரியே இவை அனைத்துக்குமான அரசியல் காரணம் என்பதை அம்பலப்படுத்திப் போராட வேண்டியுள்ளது. எதிரிகள் பலர் என்பதால், இதற்கான உழைப்பு அதிகமானது. இதைச் செய்ய உங்களை தோழமையுடன் அழைக்கின்றோம்.

பி.இரயாகரன்
18.05.2009


இந்தக்கட்டுரை jkpo;Nrf;fps; இணையத்தளத்திலிருந்து நன்றியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டது

Tuesday, May 12, 2009

இது ஒரு வெண்பாவாக்கும்- தளைதட்டினால் சொல்லுங்கோ

பேதமையும் கூனும் குமிழ்முலையுஞ் சீரல்ல
வாட்க்கூர்க் கவிவாய்கொள் வஞ்சியர்க்கு
சீலம் குழையும் சிறுதட் குவழைமலர்
கண்ணினெழிலோ அழகல்ல -பொன்
முத்துதிர்த்தே செப்பும் பழமிள காய்ப்
பழிக்கும் இதழ்கூ டழகல்ல
பாவையர்க்கு பார்வியக்கும் மேதமைப் பட்டறிவின்
மேற் படிப்பறிவே மேல்.



Attach your blog with http://www.yaaldevi.com/ and share it with friends by SMS.

Saturday, May 09, 2009

முகில்விலகி.....

மாதா கோவிலின் சிலுவை
சிவப்பாக வழிகிறது.
கூம்பு மரங்களுடே
அணைக்கமறந்த சிகரட்டின்
கங்குகளாய் துடிக்கின்றன பூச்சிகள்
கூதல்காற்றை உறிஞ்சி
இறுகிப்போகின்றன
என் மார்புக்காம்புகள்.
முழுதாகச்சாத்தப்படப் போகின்ற
ஐன்னல் இடுக்கில் விரிகிறது என் உலகம்.

விசிறிவாழை இலை
நேற்றுச்சொன்னது
உன்னைத் தொடுவேனென்று.
மௌனக்குழம்பை பூசியவாறு
இருளைவிலக்கிப்பார்கிறது-அதன்
வாய்புலம்பல் ஓயவில்லை இன்னமும்!
மின்னி மின்னி மறையும் பென்னம் பெரிய
கொக்கக் கோலா..
இருட்டுப்புறாக்கள் அடிக்கடி
அலகுகோதுகின்றன.

மெல்லமறையும் தலைவலிபோல
எங்கேயோ மூலையில்
விடிந்துகொண்டிருந்தது
பொழுது.
தன் வெள்ளை
மேலாடையயை
காற்றுக்கு பறிகொடுத்து
என் ஜன்னலின் வெளியே
காற்றில் நடந்து போனாள் அவள்


எங்கள் மருதமூரான் இங்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.அதை இன்னமும் மென்மையாகச்சொல்லும் முயற்சியாக இருக்கும் இது



Attach your blog with www.yaaldevi.com and share it with friends by SMS.

Friday, May 08, 2009

அய்யோ! அது நான் தொலைத்த வாழக்கை…

இந்தியா இலங்கையில் மத்தியதர வறிய குடும்பங்களில் பெரும்பாலும் இதனை அவதானிக்கலாம்.திருமணத்திற்குப்பிறகு தாயும் தந்தையும் மிஞ்சிப்போனால் ஒரு இரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.வெளியே சுற்றித்திரிவர் விiளாயாட்டாக அடித்துக்கொள்வர் சொந்தங்களின் வீடுகளுக்கு ஜோடியாக போய்வருவர்.பிள்ளைகள் பிறந்ததும் ஆரம்பிக்கிறது சனி. தங்களை எப்படியெல்லாம் ஆகவேண்டும்என்று கனவுகண்டார்களோ அதெல்லாவற்றையும் தங்கள் பிள்ளைகள் மேல் கவிழ்த்துக்கொட்டுவார்கள்.அந்த வார்ப்புருவில் இருந்து மகனோ மகளோ சற்று விலகினாலும் தங்களது கனவுக்கோட்டைகள் தகர்;ந்துவிட்டது போல ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள்.சிலவேளைகளில் அவை வார்த்தைகளாலும் வெடித்து கேட்பவரை சங்கடத்துக்கும் குடும்பங்களில் நிம்மதிக்குலைவுகளையும் ஏற்படுத்துகின்றன.ஆனால் இந்த அபந்தத்ததை சரியென்றும் பாசமென்றும் வாதிடுவோரும் உள்ளனர்.


யாழ்ப்பாணக்குடும்பங்களில் ஒரு பழக்கமிருக்கிறது.ஒரு சின்னப்பிள்ளையிடம் "நீ என்னவாக வரப்போகிறாய் ? டோக்டராகவா அல்லது இன்ஜினியராகவா? " என்று தான் கேட்பார்கள்.மிகுதித்தெரிவு கிடையாது.பெற்றோரின் தெரிவு இந்த இரண்டு வகைகளுக்குமிடையே முற்றுப்பெற்று நிற்கிறது.அதற்குமேல் மிஞ்சிமிஞ்சிப்போனல் "பைலட்டாகவா" என்று இன்னும் அபந்தமான தெரிவைக்கொடுப்பார்கள்.பிள்ளைகளின் மனதில் இந்த இரண்டும்தான் சிறந்தவை மற்றவை எல்லாம் அவற்றிலும் பார்க்க குறைந்தவை என்ற உணர்வை தங்களை அறியாமலே ஏற்படுத்திவிடுகிறார்கள்.
இந்த உணர்சியுடனே வளரும் குழந்தைகள் சில துறைகளில் அவர்களுக்கு பிரத்தியேகமான திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்கொணர்வதிலோ மெருகேற்றுவதிலோ கவனத்தை செலுத்துவதில்லை.சுவர்களில் சித்திரம் வரைவதிலோ துண்டு;ச்சீட்டில் கவிதை கிறுக்குவதிலோ நின்று விடுகிறார்கள். ஆனால் மனதில் தாங்கள் தெரிந்த பாடத்தைவிட இவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.கற்பனை வளம் கூடிய மாணவர்களால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது.பாடங்கள் விரிவுரைகள் அங்கால் நடக்க இவர்கள் தங்கள் கனவுலோகத்தில் மூழ்கியிருப்பார்கள்.பரீட்சை முடிவுகள் வந்ததும் “எனக்கு உது சரிவராதெண்டு சொன்னான் தானே? என்று மகனும் “உவனுக்கு ரீயூசனுக்கு காசைக்கொட்டின நேரம் நாலு தென்னம் பி;ள்ளை நட்டிருக்கலாம்.இவனுக்க என்ன குறைவச்சனான்..நாங்கள் சாப்பிடாமலெல்லா இவனை படிப்பிச்சனான்.” என்று தகப்பனும் பாட்டுக்கள் பாடுவர்.

இதெல்லாம் சரி தவறென்று வாதிடுவதற்கு முன்னர் பிள்ளைகளின் விடயங்களில் ஒரு அளவிற்கு மேல் தலையிடுவது எந்த அளவு சரியானது?தனது கனவுகளையோ அல்லது தான் முயன்று தோற்றுப்போனதையோ தனது சந்ததிகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளப்பார்ப்பது அருவருக்கத்தக்கதாயல்லோ இருக்கிறது.என்னுடைய பெரியப்பா ஒருவர் நான் வளரும் மட்டும் அவரிடம் நான் பார்த்தது இரண்டே இரண்டு காற்சட்டைகள் தான்.இப்பொழுதும் எனக்கு ஞாபம் இருக்கிறது அந்த முழங்காலில் வெளிறியதும் கிழிந்ததுமான டெனிம்.( இப்ப அதுதான் நாகரீகமாகப்போகிறதென்று அவருக்கு அப்பவே தெரிந்திருக்கிறது  ) பிள்ளைகளை சயிக்கில் கரியரில் ஏற்றி இந்த யாழ்பாபண முடக்குகளில் உள்ள ரீய+சனக்கெல்லாம் கொண்டு திரிவார்.பையில் சாப்பாடும் சுடுதண்ணிப்போத்தலில் பாலும் கொண்டு வலு கரிசனையாக பிள்ளைகளுக்கு சாப்பாடுகொடுப்பார்.திரும்பவும் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ரியூசனுக்கு வெளிக்கிடுவார். கணிதத்தில கொஞ்சம் புள்ளி குறைந்தால் அன்றைக்கு மாட்டடிதான்.இரத்த்தைச்சிந்திப்படிப்பிக்கிறன் என்று அடிக்கடி சொல்லுவார்.பெரியவனுக்கு இஞ்சினியராகவும் சிறியவனுக்கு டொக்டராகவும் இரண்டு தட்டுக்களை தன்னுள் வைத்திருந்தார்.உலகத்தில் உள்ள வாத்தியங்களை எல்லாம் பிள்ளைகளுக்கு பழக்கவேண்டுமென்ற அவாவில் திரிந்தார்.பின்னாளில் என்னவாயிற்று என்றால் பிள்ளைகள் அவருக்கு கிட்ட வரவே பயப்பட்டன.அவரில் இருந்து மனத்தளவில் தூரவிலகத்தொடங்கின.அவருக்குள் இருந்த உண்மையான தந்தைப்பாசத்தை இந்த போலியான நடவடிக்கைகளால் பிள்ளைகள் உணரத்தவறிவிட்டன.
கடைசிவரை பிள்ளைகளை அவர் சொந்தக்காலில் நிக்கவோ சுயமாகச்சிந்திக்கவோ விடவேயில்லை.அவருடை இளைய மகனுக்கு ட்றம்ஸ் வாசிப்பதில் அபாரமோகம்.இருப்பது கொழும்பில் பக்கத்துவீடுகள் எல்லாம் நெருக்கமாக இருக்கின்றதே என்று நினைக்காத அளவுக்கு ஒரு ட்றம்ஸ்செட்டை வாங்கி ஓங்கிக்குத்திக்கொண்டிருந்தான்.பெரியப்பா அவனை ஒஸ்ரேலியா அனுப்பினார் பட்டப்படிப்புக்காக.ஆனால் அங்கு அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.ட்றம்ஸ் சத்தத்துடனே அவனது காதுகள் நின்றுவிட்டன.பெரியப்பாவுக்கு இங்கு வட்டியும் பிறஷரும் ஏறியதுதான் மிச்சம்.தங்கள் முழவாழ்கையையும் பி;ள்ளைகளின் முழவாழ்கையையும் நாறடிக்கும் இந்தச்செயலைச்செய்ய அவர் சில காரணங்கள் வைத்திருந்தார்.ஓயாமல் இன்னொருவரின் பிள்ளையுடன் தன் பிள்ளைகளை ஒப்பிடுவார்.தன்பி;ள்ளைகள் டொக்டர் இஞ்சினியர் என்று சொல்லித்திரிவதற்காக என்ன செய்யவும் தயாராக இருந்தார்.அதேபோல் அவர்களும் தங்களது தோல்விகளுக்கெல்லாம் இவரையே கைகாட்டிவிட்டனர்.இத்தனைக்கும் பார்த்தால் அவரும் மனைவியும் சந்தோஷமாக இருந்ததில்லை.எல்லாம் பிள்ளைகளுக்கா என்று ஒரு கோடு கீறி ஏறிநின்றுவிட்டார்.
தனது வாழ்க்கைக்கும் தனது மற்றய சந்தோஷங்களுக்கு அர்தம் ஒன்றைக்கற்பிக்கவும் குற்ற உணர்வுகளில் இருந்து விடுபடவும் அவர் இந்த ‘இரத்தம்சிந்திப் படிப்பிப்பதை’ ஒரு காரணமாகக்கொண்டார்.சாதாரண வாழ்க்கை வாழ்கிறோமே என்ற குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காக ‘பிள்ளைகளை படிப்பித்தல் பயிற்றுவித்தல் ‘ என்ற போர்வையைப்போர்திக்கொண்டார்.அது அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தது அவருக்கு நிம்மதியை கொடுத்தது.அனால் அவரது பிள்ளைகள் கூடிய புள்ளிகள் எடுக்கும் போது பி;ள்ளைகளைவிட அதிகம் சந்தோஷப்பட்டார்.ஆனால் பிள்ளைகள் அப்படியிருக்கவில்லை.குறைய புள்ளிகள் எடுத்தால் மாட்டடியும் கூடிய புள்ளிகளில் தந்தையின் துள்ளிக்குதிப்பிலும் பிள்ளைகளுக்கு தங்களின் நிலை என்ன என்று புரிபடவில்லை.கூடியபுள்ளிகள் எடுக்கும் போது தந்தையின் மகிழ்ச்சியையும் குறைந்த புள்ளிகள் எடுக்கும் போது அதற்குகாரணமாக தந்தையையும் கைகாட்ட அவை பழகிக்கொண்டன.தானகப்படித்து அதில் குறைந்த புள்ளிகள் எடுக்கும் போது கிடைக்கும் மனவேதனையை பிள்ளைகள் உணர்ந்துகொள்ளவும் அவற்றை அடுத்தமுறை திருத்திக்கொள்வோமென்று பிள்ளைகளாக நினைக்கவுமான சந்தர்ப்பத்தை வழங்க அவர் தவறிவிட்டார்.
இது பிள்ளைகளின் படிப்பில் மட்டுமல்ல வேறுவிடயங்களிலும் நடக்கிறது.தந்தை பிள்ளை உறவில் மட்டுமல்ல அண்ணன் தங்கை அக்கா தங்கை அம்மா மகள் போன்ற ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் குடும்பச்சங்கிலிகளில் இதனை காணலாம்.தங்கையையோ தம்பியோ படிப்பதற்காக திருமணம் செய்யாமல் தாங்கள் படிக்காமல் இருப்பவர்ளை அடிமுட்டாள்கள் என்றுதான் சொல்லவேண்டும்.தான் பாழாவது மட்டுமில்லாமல் தேவையற்றமுறையில் அடுத்தவனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதும்தான் இதன் முடிவாக அமையுமே அல்லாது இதில் மற்றவருக்கு எந்த நன்மையும் இல்லை.

முனிதர்களில் ஒருவரை ஒருவர் அடிமைகொள்வது ஜீன்களில் படிந்திருக்கிறது.போர்கள் மட்டுமல்ல பணம் பதவி அன்பு ஆகியவைகளும் அவற்றில் அடக்கம்.மேல்சொன்னது அன்பால் அடிமைகொள்வது.இந்தப்பூமியில் நீங்கள் அனுபவிப்பதையெல்லாம் தானும் அனுபவிக்க எல்லாவற்றையும் தனது சொந்தப்புலன்களால் உணர்ந்துகொள்ள பிறந்தவர்களை உங்களுக்கேற்ற மாதிரி உங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான தந்திரமான பிரயோகம்தான் இந்த அன்பினால் அடிமைகொள்தல்.சாதகமான ஒன்றை மற்றவர்களுக்கு அறியத்தரவிரும்பினால் மெல்லிய அறிவுரை போதுமானது.அதையும் மீறினால் அவர்கள் அதன் கெடுதியை அனுபவத்தால் தெரிந்து கொள்ளட்டும்.அது இதிலும் பார்க்க கெடுதியானதிலிருந்து தப்புவதற்கு அவர்களுக்கு உதவும்.இவற்றுக்கு நடுவே நீங்கள் புகுவதனால் வாழ்க்கை முழக்க அவர்களை தற்காக்க வேண்டிய பொறுப்பை நீங்களே தலைமேல் போட்டுக்கொள்கிறீர்கள்.எனது மகனுக்காக மகளுக்காக நான் இதைச்செய்வேன் எனது வாழ்க்கையை அர்பணிப்பேன் என்று மறைகழண்டவனாகப்புலம்பினால் அவர்களின் எல்லாத்துயரங்களுக்கும் இயலாமைகளுக்கும் தலைமைத்துவக்குறைவுக்கும் நீங்களே அத்திவாரம் போடுவீர்கள்.

பாவம் எனது பெரியப்பா கடைசிவரை அவர் அதனைப்புரிந்து கொள்ளவில்லை.போனமுறை நான் விடுமுறையில் போயிருந்தபோது பேருனுக்காக முங்கில் தடிவளைத்து பிரம்பு செய்துகொண்டிருந்தார்.



Attach your blog with www.yaaldevi.com and share it with friends by sms.

Saturday, May 02, 2009

சிங்களவர்கள் எனது நண்பர்கள்

எனது அலுவலகத்தில் எனது சிங்களநண்பன் ஒருவனின் ஸ்கைப் புரொபைலில் 'றிபியூட் அவர் வொறியர்ஸ' என்றிருந்தது.
அவனை நேரில் சந்திக்கும் போது இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.கிளிநொச்சியை கைப்பற்றியதற்காக அவர்ளுக்கு கொடுக்கும் மரியாதை என்று சொன்னான்.

அப்ப கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் செத்த பொதுச்சனத்திற்கும் சேர்த்துத்தானா இதைப்போட்டிருக்கிறாய் என்று கேட்டேன்.அவனது கோபத்தை கிளறவும் ஆரோக்கிய மான விவாதம் ஒன்றைத்தொடங்குவதுமே எனது நோக்கமாக இருந்தது."இந்தக் குரும்பட்டி பிளேன் சுத்தினதுக்கே நீங்கள் எப்படிஎல்லாம் பயந்தநீங்கள்...வன்னியில் இருப்பதுவும் மனிதர்கள்தானே அவர்களுக்கு மிக்கும் சுப்பர்சொனிக்கம் சுத்துவதும் மல்ரிபரல் மழைபொழிவதும் பயத்தை உண்டாக்காதா?அக்வாவும் அண்ணாவும் தனக்கு முன்னால் பிணங்களாக விழுவதும் தந்தை தாய் துண்டுகளாக்கப்படுவதும் எப்படிச்சீரணித்துக்கொள்ள முடியும் என்று கேட்டேன்.

. பயங்கரவாதம் நீங்கள் சொல்லும் புலிகளிடம் மட்டுமில்லை என்பது உனக்குப்புரியவில்லையா என்று கேட்டேன்.அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்பது நல்லது தான் ஆனால் அதற்காக அரசாங்கம் மிகஅவசரப்படுவதாகத்தெரிகிறது என்று சொன்னான்.இப்பொழுதும் உண்மையாகவே அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் மீது குண்டு போடுகிறதா என்று அப்பாவியாக்கேட்டான்.

சிங்களவர்கள் உண்மையான சுபாவம் பழிவாங்குவதோ இனத்துவேசம் பாராட்டுவதோ இல்லை.சிங்களவர்கள் ஆதிகாலம் தொட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.அவர்களுக்கும் வேறு நாட்டவர்களுக்குமான பூர்வீகத்தொடர்புகள் குறைவாக இருந்தன.நான் அறிந்த மட்டில் சிங்களமொழியும் மாலைதீவில் வழக்கில் இருக்கும் மொழியும் மட்டுமே கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன.யாழ்;பாணத்தமிழர்களைப்போல இந்திய தமிழ் ப்புத்தகங்களை வாசிக்கும் பாக்கியமோ அல்லது பண்டைய கலாச்சாரத்தொடர்புளை இலக்கியங்களை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்களாகவே இருந்தார்கள்.

வெளியுலகுடனான அவர்களது தொடர்புகள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களைப்போலல்லாது மிகவும் குறுகியதாகக்காணப்பட்டது.சிங்களவர்கள் கடல்கடந்து போனதாகவோ வியாபாரங்களில் ஈடுபட்டதாகவோ சரித்திரங்கள் குறைவே.அதே போல்தான்
அரசதொடர்புகளும் காணப்பட்டன.

குவைநி பாண்டிநாட்டு இளவரசன் மற்றும் புத்தமதபரவல் பிக்குணி சங்கமித்தை வரவு என்பன இங்கு விதிவிலக்குகளாகும்.இந்தச்சிங்கள மக்களின் உலகஞானமில்லாப்போக்கினைத்தான் யாழ்பாபணத்து மேட்டுக்குடியினரால் 'மோட்டுச்சிங்களவன் என்றும் இளநிவெட்டி என்றும்" இகழ்ச்சியாகப்பேசப்பட்டன.ஆனால் சிங்களமக்கள் தங்களுக்கான எல்லாவற்றையும் தாங்களே வளர்த்துக்கொண்டார்கள்.

கலைகள் உணவுகள் பண்டிககைள் எல்லாம் சிங்களவர்களுக்கே தனித்துவமானதாக இருந்தது.சிங்கள சினிமாத்துறைகூட இன்னமும் வளர்சியடையாததாகவும் இந்தி ஆங்கில படங்களின் பிரதிபலிப்புகளுடனும் தான் வருகின்றன.காமத்தை தூண்டும் காட்சிகள் சிங்கள சினிமாவில் சர்வசாதாரணம்.பெயர்சொல்லக்கூடிய சிங்களபடங்கதை;தவிர மற்றெல்லாம் குப்பையென்றே ஒதுக்கத்தகும்.சிங்கள சினிமாத்துறைமட்டும் இன்னமும் குறைவளர்சியடைந்ததாகவே காணப்படுகிறது.

சிங்களப்பெண்களும் மிகவும் மகிழ்ச்சி விரும்பிகள்.திருமணத்திற்கு முன் காதலிப்பது உடலுறவு கொள்ளவதென்பது சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.பெண்காதலிப்பதும் தனக்கான ஆணைத்தெரிந்து கொள்வதும் சிங்களசமூகத்தில் சாதாரணம்.இந்த மகிழி;ச்சி விரும்பும் தன்மையால் சிங்கள சமூகத்தில் பல இனங்களின் கலப்பு தென்டுகின்றது.

சிங்களவர்கள் பெரும்பாலும்; வறியவர்கள்.சிறு சிறு வியாபாரங்களில் மாத்திரம் ஈடுபடுபவர்கள். பெரும்பாலும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிங்களமக்களும் சிங்கள அரசியல் கட்சிகளால் கொம்புசீவிவிடப்பட்டவர்களும் மாத்திரமே.இவர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு முழுச்சிங்களவர்களையும் இனத்துவேசம் பட்டம் கட்டுவது வைக்கோ போன்ற சைக்கோக்களுக்குதான் ஏற்புடையது.சிங்கள மக்களிடையே நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.ஒரு மனிதனை முழுதாக நம்ப மாட்டார்கள்.வீடுகளை எப்போழுதும் பூட்டியேவைத்திருப்பார்கள்.மிகவேடிக்கை என்னவென்றால் யாழ்பாணத்தில் இருந்து வந்து சிங்கள மக்கள் நிறைந்து கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுடைய வீடு எந்நேரமும் திறந்திருக்கும் ஆனால் தலைமுறை தலைமுறையாக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்களின் வீடுகள் சாத்திய கதவுகளுடனே காணப்படும்.வேலை இடங்களில் சிங்கள மக்கள் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.மச்சாங்(தமிழில் மச்சான்) என்று மற்றவரை அழைத்துக்கொள்ளுவார்கள்.

ஒரு கடந்த பத்து ஆண்டுகளில் சிங்களவர்கள் அடைந்த முன்னேற்றம் நாலுகால் பாச்சல் என்றே சொல்லவேண்டும்.இன்று கொழும்பில் தொழில் நுட்பத்திலும் சரி பட்டப்படிப்புகளிலும் சரி சிங்களமக்களின் வளர்சி அளப்பரியது.அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்படமையும் வெளியுலகத்தொடர்புகளும் மற்றும் வடஇந்திய கலாச்சாரத்தை பின்பற்றத்தொடங்கியமையுமே காரணமாகும்.

இன்று நடக்கும் யுத்தம் தமிழர்களைப்போலவே கொழும்பில் படித்த சிங்களவர்களாலும் விசனத்துடனே பார்க்ப்படுகிறது.யுத்தவெற்றிகள் புதிதாக சிங்களமக்களிடையே போலியான நாட்டுப்பற்றொன்னினை திட்டமிட்டு வளர்து வருவதுபோல் தெரிகிறது.தமிழர்களைப்போலல்லாது படித்த சிங்கள மக்கள் கருத்துக்களைக்கேட்பதிலும் மற்றவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் அகன்ற பார்வை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம்..

"மட்டக்களப்பில் ஒரு சிங்கள போலிஸ் அதிகாரி துப்பாக்கி முனையில் தாயை சமையல்அறையில் அடைத்து வைத்துவிட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்தான்".இதை கேள்விப்பட்டது முதல் எனக்கு வேலையில் கவனம் செய்யவில்லை.இவ்வளவு யுத்தங்களுக்குபிறகும் உயி;ர் உடைமை இழப்புகளுக்கு பிறகும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமானால் இதற்கு முடிவுதான் என்ன.. என்னுடன் வேலைசெய்யும் சிங்கள இளைஞனிடம் எனது அங்கலாய்பைச்சொன்னேன்.என்னிடம் மட்டும் துப்பாக்கியிருந்தால் முதல்வேலை அவனை சுடுவதாகத்தான் இருக்கும் என்று வார்த்தைகளைக்கொட்டினேன்.

அவன் சொன்னான் இதை தமிழ் சிங்கள யுத்தமாக பார்க்காதே.இது மனித குலத்துக்கு எதிரான குற்றம்.
அதை முதலில் உணர்ந்துகொள்.இதை அரசாங்கம் மறைக்க முயலுமானால் மக்களுக்கிடையே அரசாங்கத்தைப்பற்றிய நம்பிக்கை அற்றுப்போகிறது.அதுவும் இது ஒரு குறித்த சிறுபான்மையினத்துக்கு நடக்கும் போது அரசாங்கத்தின் பாராமுகத்தால் அவர்கள் அதற்கான நீதியை பிறவளிகளில் தேடவெளிக்கிடுவார்கள்.அவ்வாறு தேடும் கூட்டத்திற்கு ஒரு தவறான கூட்டம் வழிகாட்டுமானால் ஆயிரமென்ன லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் நடக்கத்தான் செய்யும்.இவை முழுநாடும் சேர்ந்து எதிர்த்தழிக்க வேண்டிய செயற்பாடாகும்.
அவன்சொன்ன தெளிவையும் குரலின் உறுதியையும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை . .எங்களுடைய மாமன் மச்சான் சித்தப்பா சேர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் அதற்கான சுவடுகளே தெரியாமல் அழித்தொழிக்படத்தான் போகிறதா அவ்வளவு உயிர்களும் விழலுக்கு இறைத்த
நீரா..



Loops solutions - Social media marketing in Sri lanka