Saturday, September 30, 2006

ஜென்மங்கள் தோறும் தோடரும்...


அந்திவானம் மஞ்சள் வயிற்றுடன்!
இறந்துகொண்டிருக்கும் சூரியனுடன்
நிறமிழக்கும் பச்சைப்புல்வெளி
முடிவருடும் குளிர்காற்றுஉடல்குளிர்ந்து இமைமூடவைக்கும்
தொலைவில்
வெள்ளையாய் மௌனமாய்
முகில் சூழ்ந்த மலைவிளிம்புகள்-எல்லை கட்டி
பண்டைய எச்சங்களின் இரகசியங்களை
பாறையிடுக்குகளில் புதைத்துக்கொண்டு
அடக்கமாய் அமைதியாய்

சேரநாட்டு அரண்னைகளில்;
அந்திநேரக் கேளிக்கைகளின் ஆரம்பநேரம்
இன்றும்
காதோரம் உரசிச்செல்லும்
துந்துபி நாதங்களில்முற்பிறப்பு ஞாபகங்களின்
கறுப்புவெள்ளை அசைவுகள்.
அடிமனதில் அமிழ்ந்து கிடக்கும்
மெல்லிய கவலைகளின்சிலிர்ப்பு

வானம் தெலைந்துகொண்டிருக்கிறது
நீலமாய் அருகிலிருந்து
கறுப்பாய் விரிந்து..
மன்மினிப்பொத்தல்களுடன்நிறமிழந்து.
நாற்புறம் சூளும்கருப்பின் படையெடுப்பு
இருளின்கண்கள்திறக்கின்றது.
எல்லாத்திக்கிலும்கறுப்புத்தெளிக்கும் இருள்.
கறுப்பே இருளாய்
இருளே எல்லாமுமாய்


சேரநாட்டு அரண்மனைச்சுவர்கள்
இருளின் பகைகள்
நிலவின் ஒளியுறிஞ்சும்
தண்ணொளி இருள்விரட்டும்
மையிருட்டில்
தெலைவெளிகளைக் கடந்து
ஒளிரும் அரண்மனை- இருள்வெல்லும்
இரவிலும் நடக்கும் சேரன் ஆட்சி

விணையொலியின் அதிர்வில்
இலைவிரிக்கும் புல்
நந்தவனப்பாதைகளில்
அரண்களின்இடுக்குளில்.
சலங்கையொலிகளில்பலம் பெற்ற- சேரநாட்டு
அந்தப்புரத் தூண்களுடன்தேவதைகளின் இருப்பு
பனிநீர் நிரம்பும் வாவிகளில்
உடல் களுவும் ஆடையற்ற தேவதைகளின்
சிரிப்பின் சிந்து
துள்ளிவிளும் மீன்களின்
நீர்ச்சலசலப்புடன்காற்றில் கரையும்
தடாகங்களின் தங்கப்படிகளின்கரையோரம் மிதக்கும்
சிலநூறு பூக்களின்தேன்கலந்த குளத்து நீர்
சேரன் காவலில் பயம்மறந்து
நிச்சலனமாய்குறும்புசெய்யும்
வெண்துகில்தேவதைகளின்
இருப்பால் உயிர்கொண்ட உலகம்


ஒலம் நிறைந்த இடத்தில்
விலகிநிற்கும் புல்வெளி
நிசப்த்தமாய் காற்றை மட்டும்வரவேற்கும் விந்தை
மலையுச்சிகளில் மட்டும் மிஞ்சிநிற்கும்
ஒளியின் மிச்சங்கள்.
மலையின் கீழ்
பீடபுமியில்
காட்டில் புகும் மந்தைகளின் நிழலுருவங்கள்
ஏதோ ஒன்று உயிர்பெறப்போவதானஉணர்வு
நெற்றியில் வெடிக்கிறது.
காலின் கிழ் விரிந்துகிடக்கும்உலகத்தின் எல்லைகள்
உச்சியில் நான்மட்டும்
முற்பிறப்புநினைவிலும் புற்களின் நடுவிலும்
தொண்டை கிழிக்கும் ஒலியால்
மலைகளை தகர்க்கவேண்டும் போலமதர்ப்பு
காலின் கீழ்த்தூசியாககிடக்கும்உலகத்தை
இமைகளை இடுக்கிப்பார்கிறேன்.
என்றோ ஒருநாள்
சேரநாட்டுமக்களின்வாழ்விடமாக இருந்ததை.
சேரமன்னனின்
ரதங்கள் சென்ற பாதையின்தடங்கள்-இங்குதான்
எங்கோ அருகேஇருந்தது.
ஆக அதிககாலமில்லை
கீழ்க்காட்டில் குத்திட்டுவிழும்
கழுகின் சத்தம்!
பட்டமரங்களுக்கூடேஅதிர்ந்து செல்கிறது.
புதியசேரமன்னன் வரவுடன்

-சேரன் கிருஷ்

Sunday, March 26, 2006

பிடித்த கவிதை

சிகரங்களைத்தெடுவதல்ல
எங்கள் நோக்கம்
அடுத்தவன் பாதங்கள்
பணியாதிருப்பதும்
அவன் வாயுபறியும் போது
ஆனந்தமே என்று அள்ளிப்பருகாதிருப்பதுமே
எங்கள் பாதை
நான் இரவுகளின் அரசன்


நான் இரவுகளின் அரசன்
இரவுகள் என்னுடயவைஎனக்கு மட்டும்
இரவு. . .
சொல்லுக்குள்ளேயேநிசப்தமும் அமைதியும்நின்மதியும்
ஒளிந்திருக்கிறதோஎன்னமோ....!!
இரவுகளை -நான்இழப்பதேயில்லை
அனுபவித்துக்கொண்டேயிருக்கிறேன.;
காலடி ஒசைகள்தேய்ந்து கொண்டேபோகிறதுமெதுவாக....
கவனத்தைக்கலைக்காமல்தெருக்களில்வாகனங்கள்ஒன்றோ இரண்டோ
மணிக்கொன்றோ....
மணிக்கூட்டுச்சத்தம்ஸ்வரம்கூடிக்கொண்டேபோகிறது.
காற்று எங்கிருந்தோஇதமாக
ஜேர்மன் தேசத்துகவிதைகளைசுமந்கொண்டு
தங்கமும் பச்சையுமான
அல்ப்ஸ்மலைப் பூக்களின்தேன்வாசம்
இரவுகள்போதையூட்டுகின்றன..
இரவுகளின்அரசன் நான்-அவை
என்னைப்புரிந்து கொள்கின்றன.
பணிந்துபோகின்றன.
ஆனால்
எனது இரவுகள்கடனாளிகள்
எவ்வளவு வாங்கிவிட்டன!!
எனது கவிதைகளை கதைகளைசில நேரம்
எனது கண்ணீரையும் கூட..எனது கோபத்தையும் புலம்பல்களையும் வாய்திறவாமல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
உதவமுடிவதில்லை அவற்ரால்
என்னை இறுகத்தளுவிக்கொள்வதைத்தவிர
இரவுகள்அம்மாவைப்போலசாந்தமானவை
எல்லாவற்றையும்தனக்குள்ளே புதைத்துக்கொள்ளும்
ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் சில நேரம்
என்னுடன் மட்டும்!!
மாசிமாத இரவுகள் எனதுகாதலிகள்
உறங்கவிடுவதில்லை என்னை
தலைகோதும் இரவுகளின்.......
பூவாசம் வீசும்- குளிர்ந்தகைகளுக்குள்
நான்தொலைந்து போகிறேன்
அவற்றின் கறுப்பானஇளமார்புச்சூட்டிலிருந்துமீளமுடிவதில்லை என்னால்
நிர்மலமான தெளிந்த அவற்றின்கண்களில்
எனது அசைவுகளின்அபினயங்களை என்னால் பார்க்கமுடியும்.
மௌனமான இரவுகளின்துகில்அசைவுகளில்
எனது உணர்வுகளின் பாதிப்பை-என்னால்உணரமுடியும்.
எனது நண்பர்கள் எனது காதலி அன்பான எல்லோரிடமும்
எனதுஇரவுகளின் முகங்கள்தடயங்களாக அமைதியாகப்படிந்திருக்கிறதுஎன்னால் தவிரபிறரால் கவனிக்கப்படாமலே!நான் இரவுகளின் அரசன்.

-சேரன்கிருஷ்
Loops solutions - Social media marketing in Sri lanka