Sunday, March 26, 2006

நான் இரவுகளின் அரசன்


நான் இரவுகளின் அரசன்
இரவுகள் என்னுடயவைஎனக்கு மட்டும்
இரவு. . .
சொல்லுக்குள்ளேயேநிசப்தமும் அமைதியும்நின்மதியும்
ஒளிந்திருக்கிறதோஎன்னமோ....!!
இரவுகளை -நான்இழப்பதேயில்லை
அனுபவித்துக்கொண்டேயிருக்கிறேன.;
காலடி ஒசைகள்தேய்ந்து கொண்டேபோகிறதுமெதுவாக....
கவனத்தைக்கலைக்காமல்தெருக்களில்வாகனங்கள்ஒன்றோ இரண்டோ
மணிக்கொன்றோ....
மணிக்கூட்டுச்சத்தம்ஸ்வரம்கூடிக்கொண்டேபோகிறது.
காற்று எங்கிருந்தோஇதமாக
ஜேர்மன் தேசத்துகவிதைகளைசுமந்கொண்டு
தங்கமும் பச்சையுமான
அல்ப்ஸ்மலைப் பூக்களின்தேன்வாசம்
இரவுகள்போதையூட்டுகின்றன..
இரவுகளின்அரசன் நான்-அவை
என்னைப்புரிந்து கொள்கின்றன.
பணிந்துபோகின்றன.
ஆனால்
எனது இரவுகள்கடனாளிகள்
எவ்வளவு வாங்கிவிட்டன!!
எனது கவிதைகளை கதைகளைசில நேரம்
எனது கண்ணீரையும் கூட..எனது கோபத்தையும் புலம்பல்களையும் வாய்திறவாமல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
உதவமுடிவதில்லை அவற்ரால்
என்னை இறுகத்தளுவிக்கொள்வதைத்தவிர
இரவுகள்அம்மாவைப்போலசாந்தமானவை
எல்லாவற்றையும்தனக்குள்ளே புதைத்துக்கொள்ளும்
ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் சில நேரம்
என்னுடன் மட்டும்!!
மாசிமாத இரவுகள் எனதுகாதலிகள்
உறங்கவிடுவதில்லை என்னை
தலைகோதும் இரவுகளின்.......
பூவாசம் வீசும்- குளிர்ந்தகைகளுக்குள்
நான்தொலைந்து போகிறேன்
அவற்றின் கறுப்பானஇளமார்புச்சூட்டிலிருந்துமீளமுடிவதில்லை என்னால்
நிர்மலமான தெளிந்த அவற்றின்கண்களில்
எனது அசைவுகளின்அபினயங்களை என்னால் பார்க்கமுடியும்.
மௌனமான இரவுகளின்துகில்அசைவுகளில்
எனது உணர்வுகளின் பாதிப்பை-என்னால்உணரமுடியும்.
எனது நண்பர்கள் எனது காதலி அன்பான எல்லோரிடமும்
எனதுஇரவுகளின் முகங்கள்தடயங்களாக அமைதியாகப்படிந்திருக்கிறதுஎன்னால் தவிரபிறரால் கவனிக்கப்படாமலே!நான் இரவுகளின் அரசன்.

-சேரன்கிருஷ்

0 comments:

Loops solutions - Social media marketing in Sri lanka