Saturday, May 09, 2009

முகில்விலகி.....

மாதா கோவிலின் சிலுவை
சிவப்பாக வழிகிறது.
கூம்பு மரங்களுடே
அணைக்கமறந்த சிகரட்டின்
கங்குகளாய் துடிக்கின்றன பூச்சிகள்
கூதல்காற்றை உறிஞ்சி
இறுகிப்போகின்றன
என் மார்புக்காம்புகள்.
முழுதாகச்சாத்தப்படப் போகின்ற
ஐன்னல் இடுக்கில் விரிகிறது என் உலகம்.

விசிறிவாழை இலை
நேற்றுச்சொன்னது
உன்னைத் தொடுவேனென்று.
மௌனக்குழம்பை பூசியவாறு
இருளைவிலக்கிப்பார்கிறது-அதன்
வாய்புலம்பல் ஓயவில்லை இன்னமும்!
மின்னி மின்னி மறையும் பென்னம் பெரிய
கொக்கக் கோலா..
இருட்டுப்புறாக்கள் அடிக்கடி
அலகுகோதுகின்றன.

மெல்லமறையும் தலைவலிபோல
எங்கேயோ மூலையில்
விடிந்துகொண்டிருந்தது
பொழுது.
தன் வெள்ளை
மேலாடையயை
காற்றுக்கு பறிகொடுத்து
என் ஜன்னலின் வெளியே
காற்றில் நடந்து போனாள் அவள்


எங்கள் மருதமூரான் இங்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.அதை இன்னமும் மென்மையாகச்சொல்லும் முயற்சியாக இருக்கும் இது



Attach your blog with www.yaaldevi.com and share it with friends by SMS.

1 comments:

maruthamooran said...

நான் கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னதை நீ நாகரீகததுடன் சொல்லியிருக்கிறாய் நால்லாயிருக்கடா...

Loops solutions - Social media marketing in Sri lanka