Friday, August 10, 2007

தினம் தினம் புதிதாய்


இன்றைக்கு வெள்ளிக்கிழமை.நாளைக்கு வேலையில்லையென்றுநினைக்கும் போதே சந்தோஷம் பொங்கியது.அந்த சந்தோஷத்துடனே காலமைவிடிய பக்கத்தில் இருக்கிற கிரவுண்டில் ஓடவேளிக்கிட்டேன்.மெல்லிய ஈரக்காற்றில்இ விடிந்தும் விடியாத நேரத்தில் யாருமில்லாத வெளியில் ஓடுவதே தனிஇன்பம்.இந்த உலகத்தில் இருப்பவர்களுக்குச் சம்பந்தமில்லாத இடத்திலஇ; எனக்குமட்டும் சொந்தமான இடத்தில் தனியனாக கட்டற்று இருக்கும் ஒரு உணர்வு ஒருபுதுஉற்சாகம் பொங்கிவரும்.ஓடிக்களைத்த பிறகு இரைக்க இரைக்க வியர்வை காயும்வரைக்கும்; புல்தரையில் படுத்துக்கொண்டு கண்டதையும் நினைத்துக்கொண்டிருப்பேன்.சோம்பல் கலைந்து தகதகக்கும்சூரியவெளிச்சத்தில் பச்சைப்புல்தரைகளில் வந்து குதிக்கும் மைனாக்களையும் புறாக்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுசிகரட்புகைப்பதைப்போல் சந்தோஷம் இந்த உலக்த்தில் இல்லையென்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

விடியற்காலை.. விடிந்தும் விடியாத இளங்காலைப் பருவம் என்னுடைய சின்ன வயது முதலே என்னுள் பதிந்து விட்ட ஒன்று.என்னுடைய சந்தோஷமான தருணங்கள் எல்லாமே பெரும்பாலும் அதிகாலையிலேயே நடந்திருக்கிறது.கொளும்பில் எங்கு வீடுமாறினாலும்; எனக்கு ஒரு புல்வெளி கிடைத்துவிடும்.புல்வெளிகளைக் கண்டவுடனே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் தும்பிகளைக்கலைத்த பத்துவயதுச்சிறுவனுக்கு இருப்புக்கொள்வதில்லை.அங்கு செய்தது போல் புல்வெளிகளில் தும்பி பிடிக்க இப்பொளுது அவனுக்கு முடிவதில்லை.புல்லில் படுத்துக்கொண்டு தும்பிகளையும் பறவைகளையும்;பார்பதில் அந்த சந்தோஷம் அவனுக்கு கிடைத்துவிடுகிறது.
தூரத்தில் புத்தவிகாரத்தில் இருந்து பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள்.எல்லாரும் வெள்ளை நிற ஆடைகளில் மெதுவாகஇநிதானமாக வெளிவரும் பெண்கள். புத்தகோயில்களின் அருளையெல்லாம் தங்களுடன் எடுத்துச்செல்வது போல ஓளிரும்முகங்களுடன் தங்களுக்குள் பேசிக்கொண்டு கிரவுண்டை கடந்து போனார்கள்.கோபுரங்களில் இருந்து வெள்;ளைப்புறாக்கள் சிறகடித்துப்போனது போல ஈர்க்கும் தடயங்களை தங்களின் பாதைகளின் பின்னேவிட்டுக்கொண்டு அவர்கள்போனபிறகும் மங்கல் வெள்ளை ஒளியொன்று பாதையில் கசிவதுபோல பிரமை.புல்லிலிருந்து தலையை நிமிர்த்திப்பார்த்துக்கொண்டிருந்ததில் கழுத்தில் நோகிறது.பெண்களைப்பார்த்துக்கொண்டிருப்பதில்தான் என்ன சந்தோஷம் பேசவேண்டாம் சிரிக்கவேண்டாம்.வெறுமனே பார்துக்கொண்டிருந்தாலே போதும் சந்தோஷமும் உற்சாகமும் தானே வந்துவிடும்கிரவுண்டில் இன்னும் நாலுதரம் சுற்றிஓடலாம்போல…என்ன இருக்கிறதோ தெரியவில்லை பெண்களிடம்.

என்னுடைய உலகம்கூட பெண்கள் சூழ்ந்த உலகம். வீட்டிலேயே நான்கு பெண்கள் அம்மம்மாவையும் சேர்த்து.அப்பாவுக்குப்பிறகு நான்மட்டுமே வீட்டுக்கு வீரமான ஆண்மகன்..நால்வரின் விதம்விதமான அன்பையும் நான்மட்டுமே சுமக்கமுடியாமல் சுமந்து வளர்ந்தேன்.அவர்களை அதிகாரம் செய்வதிலேயே என் நாட்களைக்கழிந்திருக்கின்றன..நான் பாடசாலைக்கு கிளம்புமுன் எல்லாரும் களைத்துசோர்ந்து விடுவார்கள்.ஆட்டிவைத்துவிடுவேன். எனது சத்தம் றோட்டுவரைக்கும் கேட்கும்எனது சின்னத்தங்கச்சி கூட நான்கத்துவதைப்பார்த்துசிரித்துக்கொண்டு எனது சப்பாத்தை துடைப்பது ஞாபகம் வருகிறது,.அப்படி அன்பார்ந் அதிகாரங்கள்சிலநேரங்களில் இப்போளுதும் வேண்டியிருக்கிறது.ஆபத்தற்றஇஅன்பானவர்களிடம் மட்டுமே காட்டக்கூடிய அதிகாரங்கள்.கொளும்பில் எங்கு போய்க்காட்டுவது… பெண்கள் இல்லாத உலகத்தை கற்கனைசெய்யவே கசக்கிறது.

கழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த புல்லின் மிச்சங்களையும் பனிநீரின் கசிவையும் உள்ளங்கையால் தேய்த்து பரப்பிக்கொண்டேன் குளித்துவிட்டு அயன் பண்ணிஇன்னமும் சூடாகவே இருந்த உடைகளை போட்டுக்கொண்டு கோல்றோட்டை நோக்கி நடந்தேன்.ஆழ்ந்து மூச்சிழுத்து விடும் ஒவ்வொருதரமும் ஏழு மணிவெயிலுடன் கலந்த குளிர் காற்று நுரையீரலை நிரப்புகிறது.

இன்னும் கொஞ்சம் ஆவ்ரஷேவ் அடித்திருக்கலாம்…

றோட்டின் இரண்டு பக்கங்களிலும் அறிமுகமில்லாத மனிதர்கள் கடந்து போகிறார்கள்.விரைவாகஇ செல்போனுடன் போர்சை துளாவிக்கொண்டு உடைகளைசரிசெய்துகொண்டு பயணப்படும் மனிதர்கள்.ஒவ்வொருவராக கடந்து செல்லும் போதும் அவர்களின்மனதைப் படிக்கமுனைவது போல அவர்களின் முகங்களை மெதுவாக பார்க்கிறேன்.எனது நடப்பு அவர்களில் ஏதும் மாற்றத்தை காட்டுகிறதா என்று அவர்களின் முகக்குறிகளை தெரிந்துகொள்ள முனைகிறேன்.இயற்கையும் மனிதர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டவர்ளை போல அமைதியான காலைநேரத்தில் சப்தமில்லாமல் ஒருவரையொருவர் கடந்து செல்லும் மனிதர்கள்.தொலைவில் திருட்டுத்தனமாக ஒருவரையொருவர் நோட்டமிட்டுக்கொண்டும் அருகில் வரும்போது தலையைக்குனிந்கொண்டும் முகத்தை செயற்கையாக இறுக்கிக்கொண்டும் கடந்துசெல்லும் மனிதர்கள்.என்ன இருந்தாலும் கலைநேரம் குளித்து சுத்தமான உடையில் செல்லும் சகமனிதர்களை பார்க்கும்போதுவரும் இயல்பான உற்சாகத்தில் இந்த வெறுமையை ஒளித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

கணபதியின் கடையில் சாப்பிடும் போது கணபதி எதோ புதுப்படத்தைபற்றி சொல்pக்கொண்டிருந்தான்.மாத்தையா..சொதிகொஞ்சம் போடவா.? கேட்டுக்கொண்டே சொதியை விடடான். அவன் பதிலை எதிர்பார்ப்பதில்லை.என்னுடைய யூகம்அது.அவன்கேட்டு வாய்மூடமுன்னம் இலையில் கவிழ்ந்து படுத்தால்தான் அவன்சொதிவிடுவதை தடுக்கமுடியம்.சொதிக்குள்ளே மூழ்கித்தொலைந்து போய்விட்ட இடியப்பத்தை துழாவிக்கொண்டு கணபதிசெல்வதை கேட்டுக்கொண்டிந்தேன்அவனுக்கும் என்னுடையவயதுதான்.இருபத்தொன்று.எஸ்டே;காரன்.கணபதி ஏதோ சொல்லிவிட்டு சிரித்தக்கொண்டு என்னைப்பார்தான்.பதிலையோ சிரிப்பையோ எதிர்பார்த்த முகத்துடன்.என்னுடைய சிந்தனை ஏழு நதிகள் ஏழு மலைகள் ஏழுகடல்கள் தாண்டி துருக்கி ராஜகுமாரியின் கால்சலங்கைகளை நோண்டிக்கொண்டிருந்தது.மெதுவாக சாப்பிட்டு விட்டு எழுந்தேன்.நான் ரிப்சுக்கு வைத்த காசையே கணபதி உத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.முகம் தொங்கிப்போய் இருந்தது.புறாக்களும் தும்பிகளும் பறந்து போன காய்ந்த புல்வெளிமாதிரி அவனது முகம் மங்கிப்போய்த்தெரிந்தது.ஒரு வேளை கணபதி நான் எதாவது சொல்லுவேன் என்று எதிர்பார்த்தானோ…

“மண்ணிறமான பட்டமரம்!
நிறமிழக்கத்தொடங்குறது…
பச்சை ஓணான்”
சம்பந்தமேயில்லாமல் ஒருஹைக்கூ மின்னலடித்து மறைந்துபோனது எனக்கு.

எனக்கு முன் அந்தப்பெண் மும்முரமாக வேலைசெய்துகொண்டிரந்தாள்.குளிர்மையான இளப்பச்சைநிறத்தில் மேல்சட்டையுடன் கழுத்தோரம் சிறிதுவிலகி வெண்பழுப்புத்தோள்கள் தெரிந்தன.கழுத்தின் அசைவுளில் விலகிய தலைமயிரின் அசைவுகளில் வெட்டிவெட்டி மின்னிய வெண்நிறம் கண்ணைபறித்தது.நளினமாக அசைந்துகொண்டிருந்த விரல்களுடன் கண்கள் கணனித்திரையை மேய்ந்துகொண்டிருந்தன.தெலைதூரத்து நெல்வயல்களின்
நடுவேநிமிர்ந்து நிற்கும் ஒற்றைத்தென்னைமரம்போல சோகமாக கம்பீரமாக தெரிந்தாள்.கண்ணைத்திருப்புவதற்கு கடினமாகஇருந்தது.
முந்திய நாள் டிசைன்பண்ணிய கிளையன்ரின் டேட்டாபேசை சேவருக்கு அப்லோட் பண்ணியாக வேண்டும்.ஒரு அனுமதிமின்னஞ்சலை அமரிக்காவுக்கு சுட்டு விட்டு சுகமாக உட்கார்ந்திருந்தேன்.நிச்சயமாகத்தெரியும் அடுத்த இரண்டுமணிக்கு எந்த வேலையுமே எனக்கு கிடையாது.சோம்பலுடன் இணையத்தில் தமிழ் பக்கங்களை கூகிள் பண்ணிக்கொண்டும் மைக்றொசொவ்ட்டில் Nலைகிடைப்பதாய் பகல் கனவுகண்டுகொண்டுமிருந்தேன்.கறுப்பு பூசிய கண்ணாடி ஜன்னலுக்குவெளியே பதினொருமணிவெய்யில் சாம்பல் பூசியதுமாதிரி சோம்பலாகத் தெரிந்தது.கணனிகளின் விசிறிச்சத்தம் மட்டும் மெதுவாகக்காதைக்குடைகிறது.கணினித்திரைகளை வெறித்துப்பார்த்தபடி சுற்றிலும் மனிதர்கள்.யாரோ அவர்களை பயப்படுத்தி உட்காரவைத்ததுபோல வெறித்தகண்களுடன்உட்கார்ந்திருக்கிறார்கள்.ம்..ம்..பதினொருமணிவெய்யில் என்னுடைய பனித்துளிகள் எல்லாம் காய்ந்து போயிருக்கும்.
கணினித்திரைநடுங்கத்தொடங்கியது.கைத்தெலைபேசியைப்பார்த்தேன்.யாழ்பாணத்துநம்பர்.அம்மாவாத்தான் இருக்கும்.அம்மாதான்.சுற்றிலும் மனிதர்களை வைத்துக்கொண்டு போனில் பேசுவது எப்போதுமே எனக்கு பிடிக்காது.உண்மையில் சரியாக போன்பேசுவது ஒரு திறமை.எனக்கு கண்ணாமூச்சிகாட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்று.ஒன்று அதிகம் பேசுவேன்.இல்லாவிட்டால் பேசாமல்கேட்டுக்கொண்டிருப்பேன்.அம்மாவின் அழைப்புக்கள் பெரும்பாலும் எப்பொழுதும் ஒரேமாதிரியே தொடங்கம்.”தம்பி எப்படி இருக்கிறாய்..நீங்கள்சொல்லுங்கோ..நாங்கள் இருக்கிறமப்பு..சாப்பிட்டியே..இப்படித்தான் ஆரம்பிக்கும்.பொதுவாக எப்பொழுதும் முதலாவது கேள்வி சாப்பிட்டியா..என்பதாகத்தான் இருக்கும்.என்னுடைய பசியையெல்லாம் தான் அனுபவிப்பள் போல பலநாள் தண்ணிர்தாகம் தொண்டையை அடைப்பதுபோல கரகரக்கும் அம்மாவின் குரல் தெலைபேசிக்குள் ஒலிக்கும்.தொலைசியூடாக என்னை தழுவமுனைவது போல இயல்பான அம்மாவின் பேச்சு.இன்னும் ஏதாவது பேசிக்கொண்டே இருங்கோம்மா..என்று மனதுக்குள் சொலலிக்கொள்ளுவேன்.
குளிர்கால மார்களி.அமைதியான ஆறுமணி விடியற்காலை..ஊமையான ஒலிபெருக்கியுடன் மருதடிப்பிள்ளயாரின் பச்சைக்குளத்துக்கு முன்னால்தென்னோலை வேய்ந்த வீட்டில் புறாக்களின் சடசடப்பு.பனிக்குளிரில் துயிலெளும்பும் 1998 யாழ்பாணம்.
அம்மாவின் குரல் இவற்றையெல்லாம் தன்னுடன் கொண்டுவந்தது.காலமைமுதல் உள்ளுக்குள் பினைந்துகொண்டிருந்து வெறுமையும் ஏக்கமும் கண்முன்னே உருகி காணாமல்போவது போல உற்சாகமாக உணர்ந்தேன்.ஈரமும் பசுமையமான என்னுடைய வாழ்க்கை இன்னமும் எஞ்சியிருக்கிறது.அன்பும் அக்கறையுமான மனிதர்களுடன் சேர்ந்த என்னுடைய எனக்கே சொந்தமான வாழ்கையைஅந்தச்சில நிமிடங்களில்; அம்மாவின் ஆழ்ந்த கரகரப்பான குரல் எனக்கு நினைவுபடுத்திவிட்டுப்போனது.

அமரிக்காவிலிருந்து பதில் மின்னஞ்சல் வந்திருந்தது.றாகா.கொம்மில் இளையராஜாவைத்தேடிப்பிடித்து ஹெட்போனை மாட்டிக்கொண்டேன்.உயர்சாதி ஸ்ரீரியோ ஹெட்போனிலிருந்து“ஜனனி ஜனனி ஜகம்நீ அகம் நீ” பாட்டு சிலிர்த்து உதிர்ந்தது.மனதுக்குள் சந்தோஷமாக… இளம்பெண்ணின் குளிர்ந்த மெல்லிய விரல்கள் தலையின்முன்மயிரை கோதிவிடுவது போல உணர்ந்தேன்.அலுவலகமே வெளிச்சமாக சந்தொஷமாக மாறிவிட்டது போல.பக்கத்து மொனிட்டரில் தலையைப்புதைத்துக்கொண்டிருந்த அந்தப்பெண் என்னைப்பார்த்து
மெதுவாகச்சிரிந்தாள்.இரவில் நிலவின் மங்கிய வெளிச்சத்தில் வல்லை வெளியில் பரந்துகிடக்கும் காட்டுப்புற்களின் வாசம் போல இதமான மென்மையான மனதைத்தொடும் சிரிப்பு.

சசி.கிருஷ்ணமூர்த்தி சேரன்
மென்பொருள் வடிவமைப்பாளர்

0 comments:

Loops solutions - Social media marketing in Sri lanka